இலங்கையில் முதன்முறையாக அமுலாகும் நடைமுறை

இலங்கையில் முதல்தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பு 7 சுதந்திர மாவத்தையில் இருந்து கிரீன்பாத் வரை இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கால் நடையாகவோ சைக்கிள்கள் மூலமோ பயணிக்க முடியும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.