யாழில் நடந்த கொடூரம்! மருமகனை அடித்து கொன்ற குடும்பம்! சிக்கியது எப்படி?

யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கில் மருமகனை (மகளின் கணவர்) மாமி உள்ளிட்டோர் இணைந்து அடித்துக் கொன்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் குடும்பத்தார் அவர் மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மாமி, மகள், மகன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் ஏழாலை மற்றும் அயற்கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு மாதங்களாக நிலவிவந்த குடும்பப் பிரச்சினையே சம்பவத்துக்கான பின்னணி எனத் தெரியவருகிறது.

உயிரிழந்தவர் இணுவில் கந்தசுவாமி கோயிலடியைச் சேர்ந்த ஜெயரட்ணசிங்கம் ஜெயந்தன் ஆவார்.

இதேவேளை, அவருக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களே ஆகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது என குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.