தமிழ் பாடசாலை மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்ட சாய்ந்தமருது நபரின் வீடியோ சிக்கியது

கல்முனை பட்டிருப்பு பகுதியில் வீதியில் செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்னர்.

நேற்று மாலை 5 மணியளவில் பட்டிருப்பு கல்முனை எல்லை வீதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவதில் சாய்ந்தமருது பகுதி 170 ஒஸ்மான் வீதியை சேர்ந்த ஆதம்லெப்பை முகம்மட் றியாஸ் (வயது – 21) என்பவரே காயமடைந்த நிலையில் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞன் சாய்ந்தமருதுவில் இருந்து மருதமுனை பகுதியை நோக்கி செல்வதற்காக பாண்டிருப்பு உள்ளக வீதி ஊடாக சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இளைஞன் தனியார் நிறுவனம் ஒன்றின் லொறி உதவியாளர் என தெரிவிக்கப்படுவதோடு இளைஞன் தொடர்பாக கல்முனை பொலஸஸார் வவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.