தமிழ் பெண் காதலித்து திருமணம்; ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தாய் செய்த செயலால் அலறிய பயணிகள்!

ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் தமிழகம் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

முன்னாள் ராணுவ வீரர் சந்தானம் – அகல்யா தம்பதியர். இவர்களுடைய ஒரே மகளான காயத்ரி, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரே மகள் இப்படி செய்து விட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் அகல்யா சமாதானம் ஆகி விட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தவித்த அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்ற அகல்யா, தமது மகள் வசிக்கும் குள்ளமுடையானூர் பெயர் பலகையை பார்த்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த பேனாக்கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்தம் பீறிடவே பயணிகள் அலறினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.