இலங்கையர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் – ஒன்றாக பிறந்து ஒன்றாக இறந்த சகோதரிகள்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை – டொரிங்டனில் ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகளில் மற்றுமொரு சிறுமியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் 12 வயதுடைய இரட்டை சகோதரிகளான மதியழகன் லெட்சுமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.

பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளநீரில் இழுத்துக் செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த மாணவியின் சடலம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.