முஸ்லிம் மாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை! தீவிர விசாரணை

முஸ்லிம் மாணவிகளின் முன்னிலையில் பன்றி இறைச்சியை உண்ணுமாறு ஏனைய மாணவர்களுக்கு கூறிய கல்கிஸ்ஸை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வாவின் முறைப்பாட்டுக்கமைவாகவே கல்வி அமைச்சு இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம் ஆசிரியர்கள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது பல்வேறு வகையான இனவாத அழுத்தங்கள் பிரயோக்கிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.