யாழில் இரவு வேளையில் இடம்பெற்ற அசம்பாவிதம்! பொலிஸ் நிலையத்தை நாடிய வீட்டு உரிமையாளர்!

யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்த விநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம் தெரியாத கும்பல் ஒன்று உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 நபர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.