வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மாணவனுடன் சிக்கிய 47 வயதான குடும்பப் பெண்

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் யாழ் பல்கலைக்கழக மாணவனுடன் முகப்புத்தகத்தில் நட்பாக இருந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கணவரால் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் 3 பிள்ளைகளின் தாயாரான 47 வயதான குடும்பப் பெண் ஒருவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த நட்பு விரிவடைந்து தகாத தொடர்புக்குச் சென்றுள்ளது.

குறித்த பெண்ணின் மூத்த பெண் பிள்ளை திருமணம் முடித்து புலம்பெயர் நாட்டில் வாழ்ந்துவருவதாகவும் ஏனைய இரு ஆண் பிள்ளைகளும் வெளிநாட்டில் படித்துவருவதாகவும் தெரியவருகின்றது.

தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்யும் பெண்ணின் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தமிழ் பல்கலைக்கழக மாணவன் பல தடவைகள் குறித்த பெண்ணை வெள்ளவத்தைப் பகுதியிலுள்ள தொடர்மாடிப் பகுதியில் அவரது வீட்டில் சந்தித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவதானித்து வந்த தொடர்மாடி காவாலாளிகள் கணவனிடம் தெரிவித்த பின்னரே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

கணவனால் தாக்கதல் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழக மாணவன் பெண்ணை கணவன் இல்லாத சமயத்தில் சந்திக்க சென்ற சமயம் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட போது பொலிசாரிடம் குறித்த பெண் முறையிட்டே அவன் விடுவிக்கப்பட்டுள்ளான்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.