பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவினர்

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வாகன சாரதி மீது பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேர் கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்துகமவை சேர்ந்த ஹெவேஜ் காமினி விஜேசூரியா மற்றும் பொலன்னறுவ, அரலகன்விலவைச் சேர்ந்த சுசந்தா பண்டாரா ஆகியோர் தற்போது கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் பயணித்த டிபெண்டர் வாகனம் மகரகமவின் எல்ஹெனா வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த போது, பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆசிரியர் ஒருவர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வாகனத்தை இடைமறித்து பிரமுகர் பாதுகாப்பு பிரிவு டிபெண்டர் வாகனமொன்றிலிருந்தவர்கள் தாக்கிச் சென்றுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.