யாழில் அதிகாலையில் நடந்த சோகம் – இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார்.

விபத்து சம்பவம் வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் டிப்பரும் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நவிண்டில் பகுதியை சோ்ந்த முகுந்தன் கிரிஷாந்த் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிாிழந்துள்ளார்.

jaffna accident death