தெல்லிப்பளை வைத்தியசாலை பெண் மருத்துவ அதிகாரி திடீர் மறைவு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் மர்ம காய்ச்சல் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மயக்க மருந்துவர் சண்முகரட்ணம் தெய்வாம்பிகை (வயது 42) என்பவரே உயிரிழந்தார்.

அவரை பிடித்த காய்ச்சலினால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்றுக் காரணமாக அவர் உயிரிழந்தார் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.