ஓய்வூதியம் பெறுபவர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

அனைத்து ஓய்வூதியக்காரர்களினதும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் கம்பனிகள் திருத்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் ஓய்வூதியம் நிறுத்தப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லை எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.