வேண்டுமென்றே மீராவின் இடுப்பை பிடித்து தூக்கிய சேரன்.. அசிங்கப்படுத்தி அழவைத்த மீரா..!

பிக்பாஸ் வீட்டில் இன்று டாஸ்க் இல்லாத போது போட்டியாளர்களான் சேரன், லாஸ்லியா, மதுமிதா மற்றும் சிலர் விளையாட்டுத்தனமாக ஓடி விளையாடினர்,

அப்போது லாஸ்லியா, மீரா ஆகியோர் ஓடிய போது, சேரன் மீராவின் இடுப்பை பிடித்து தூக்கியுள்ளார், இந்த விளையாட்டு டாஸ்க் முடிந்த பின்னர் மீரா, சேரன் என்னுடைய இடுப்பை பிடித்து தூக்கினார்.

இதனால் எனக்கு ஒரு மாதிரி இருந்தது என்று அனைவர் முன்னிலையிலும் கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சேரன் நான் அப்படி செய்திருந்தால், என்னை மன்னித்துவிடு என்று கூறினார்.

அதற்கு மீராவோ நீங்கள் வேண்டுமென்றே பண்ணீனார் என்று கூறினார். இதனால் மிகுந்த வேதனையடைந்த சேரன் எனக்கு மகள்கள் இருக்கிறாள். ஒரு டைரக்டராக நல்ல பெயர் உண்டு, மகள்கள் இருக்கிறாள் என்று கதறி அழுதார்.