மீராவின் செயலால் ஒரே நாளில் அதிரடியாக மாறிய பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை நிலவரம்! வெளியேறபோவது யார்

பிக்பாஸில் நேற்று நாட்டாமை டாஸ்க்கின்போது சேரன் தனது இடுப்பை பிடித்து தூக்கினார் என கூறி பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் இடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார், மீரா.

ஆனால் சிறிது நேரத்திலேயே போட்டியாளர்கள் அனைவரும் சேரனிற்கு ஆதராவாக பேச, உடனே அந்தர் பல்டி அடித்து தான் அவ்வாறு கூறவே இல்லையே என கூறினார். இது பார்க்கும் பார்வையாளர்களுக்கு மீராவின் மீது மிக பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நேற்றுவரை ஓட்டு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருந்த சாக்‌ஷி ஒரு இடம் முன்னேறியுள்ளார். அதேநேரம் மீரா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதே நிலைமை இந்த வாரம் முழுவதும் நீடித்தால் மீரா வெளியேறிவிடுவார்.