நல்லுாா் திருவிழா தொடர்பில் ரணிலின் முக்கிய அறிவிப்பு

நல்லுாா் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மடு மாதா ஆலயம் ஆகியவற்றின் திருவிழாக்களை எந்த அச்சமும் இல்லாமல் நடாத்துமாறும் அங்கு பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் பிரதமர் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளாா்.

அலரிமாளிகையில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கண்டியில் இடம்பெறவுள்ள எசல பெரஹெரா மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெறவுள்ள பெரஹெராக்களையும் நடத்தக் கூடிய பாதுகாப்பான சூழல் காணப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தர்பொழுது நாட்டிலிருந்த அச்சுறுத்தல் நிலைமை விலகி சாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடாக இலங்கை வெளிப்படுகின்றதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது தெரிவித்துள்ளார்.