பதவி விலகுகிறாரா வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன்? மைத்திரியின் திடீர் முடிவுகள்…

நாட்டின் 9 மாகாணங்களின் ஆளுநா்களும் அடுத்தடுத்து பதவி விலகிவருகின்றனர்.

இந்த நிலையில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனும் எதிா்வரும் புதன் கிழமைக்கு முன்பதாக பதவி விலகவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக்கின்றன.

ஜனாதிபதி செயலகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் , தென் மாகாண ஆளுநரும் இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதன் தொடா்ச்சியாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனும் புதன்கிழமைக்கு முன்பதாக தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக்கின்றன.

இதேவேளை இவர்கள் அனைவரும் பதவி விலகிய பின்னர் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ள போதும், இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து எதுவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.