உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காணாமல் போன இளைஞன் – நேற்று கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தற்கொலை தாக்குதலில் காணாமல் சமையல் கலைஞரின் உடல் நேற்றைய தினம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஷங்கிரிலா ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான விஹக தேஜாந்த என்ற இளைஞனின் சடலம் நேற்று கனேமுல்ல பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலின் போது, குறித்த இளைஞன் தற்கொலை தாக்குதல்தாரிக்கு அருகிலேயே நடமாடிய காட்சி சிசிடீவியில் பதிவாகியிருந்தது.

எனினும் தாக்குதலின் பின்னர் இளைஞனின் சடலம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் காணாமல் போனவர்கள் பட்டியலில் அவரது பெயர் பதிவு செய்யப்பட்டது.

எனினும் குறித்த இளைஞர் தொடர்பில் தகவல் கிடைக்காத நிலையில் சிதைந்த சடலம் ஒன்றிற்கு டீ.என்.ஏ சோதனை நடத்தப்பட்டது.

அதற்கமைய அந்த சடலம் குறித்த இளைஞனுடையதென உறுதியாகியுள்ளது. அத்துடன் அவரது சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.