இளைஞன் பரிதாப பலி; தமிழர் தாயக பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற சோகம்!

வவுனியாவில் இன்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து மெனிக்பாம் நோக்கி சென்ற இரண்டு மோட்டார் சைக்கிளில்கள் கல்லாறு அருவித்தோட்டம் சந்தியில் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மெனிக்பாமை சேர்ந்த சுப்ரமணியன் தனுஜன் என்ற 19 வயது இளைஞனே சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அத்துடன் அதே பகுதியை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.