மட்டக்களப்பில் மற்றுமொரு மருத்துவ படுகொலை! இன்னும் இப்படி எத்தனை பேரோ!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் ஆசிரியை ஒருவர் கொல்லப்பட்டு நாளைய தினம் ஒருவருடம் ஆகுகின்றது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை எந்த வகையில் நியாயம் கிடைக்கவில்லை .இந்த கொலைக்கு காரணமானவர்களிற்கு அப்போதே தண்டனை வழங்கியிருந்தால் அடுத்தடுத்து இடம்பெற்ற மரண சம்பவங்களில் பலரின் இறப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் .

களுதாவளையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரும் பெரியகல்லாறு மெதடிஸ் மிசன் பெண்கள் பாடசாலை ஆசிரியையும் சமூக சேவையாளரும் இறை பக்தருமான திருமதி.உதயலெட்சுமி கணேசன் (53வயது)காது கேட்டல் குறைவு எனும் காரணத்திற்காக காது,மூக்கு, தொண்டை விசேட வைத்தியநிபுராண Dr.ஜீவதாஸ் இடம் பரிசோதித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் காதின் உட்பகுதியில் மென்சவ் வளர்ந்துள்ளதாகவும், அதனை அகற்ற சிறு சத்திரசிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் வைத்தியர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஆசிரியை வைத்திய நிபுணரின் கண்கானிப்பிற்குரிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதியான 2ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சத்திரசிகிச்சை நடைபெற்று சத்திரசிகிச்சை கூடத்தை விட்டு பகல் 12 மணிக்கு வெளியேறி மீண்டும் அதே விடுதியில் (Ward-2)இல் சேர்த்து அங்கு பார்வையிட சென்ற ஆசிரியையின் மகளிடம் , மயக்கமருந்து கொடுத்துள்ளதால் கண்முழிக்க மாலை 4மணியாகும் என விடுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

பல்கலைகழக விரிவுரையாளரான மகளும் அம்மா எப்பொழுது கண்விழித்து பார்ப்பார் என ஏக்கத்துடன் தாயின் முகத்தை வைத்த கண் எடுக்காதவாறு பார்த்துக்கொண்டிருந்தபோது தாயிடம் சிறிய அசைவோ சுவாசமோ நீண்ட நேரமாக இல்லாததை கண்டு பதற்ற மடைந்தது விடுதியிலுள்ள தாதிய உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வைத்திய விடுதியில் எந்த ஒரு வைத்தியரோ, வைத்தியநிபுணரோ இருக்கவில்லை எல்லோரும் தமது தனியார் வைத்தியசாலையில் உழைக்க சென்றுவிட்டார்கள்.

அத்தோடு அவ்விடுதியில் முதலுதவி சிகிச்சை கூட தயார் நிலையில் இல்லை என்பதோடு ஒட்சிசன் கொடுக்க ஒட்சிசன் சிலிண்டர் கூட முன்னேற்பாடாக கூட இல்லை. சத்திரசிகிச்சை செய்து வந்த எனது உறவினரான ஆசிரியை கொஞ்சம் கூட நோயாளியை அவதானிக்க கூடிய நாடித்துடிப்பு, குருதியமுக்கம்,சுவாச வீதம் பரிசோதிக்காமல் எல்லோரும் அதாவது வைத்தியநிபுணர் Dr.ஜீவதாஸ் உட்பட மொத்த உத்தியோகத்தரும் படுகொலை செய்துவிட்டார்கள்.

இவ் மரணத்திற்கான காரணத்தை நாம் வைத்திய நிபுணரிடம் வினாவினால் தடுமாற்றமான பதிலாக மாரடைப்பு என்கின்றார் . சிலர் மயக்க மருந்து அதிகம் கொடுத்ததாக இன்னுமொரு காரணம் கூறினார்கள். இப்படி அநியாயமாக இவர்களின் கவனயீனத்தால் கல்வியறிவு கூடிய குடும்பமான எமது உறவினரை ஏமாற்ற முடிந்த இவர்களால் சாதரணமான கிராம மக்களை எவ்வளவு சுலபமாக ஏமாற்றுவார்கள் என்பதை பொதுமக்களாகிய நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

குறித்த ஆசிரியையின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் போலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் போலிசாரும் நம்மை ஏமாற்றுவார்கள்.ஏனெனில் இலங்கையை பொறுத்தவரை மருத்துவ விடுதியில் நடைபெற்ற மரணங்களுக்கு இதுவரை உறுதியான தீர்ப்பு கிடைக்கவில்லை.

தற்போதைய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொறுத்தவரை இப்பதான் வெளியாகிய வைத்தியர் தொடங்கி நிபுணர் வரை எல்லோரும் தனியார் வைத்தியசாலையான பைனியர், ஜீவி, வாழைச்சேனை, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி,கல்முனை, காத்தான்குடி,அக்கரைப்பற்று என ஒவ்வொரு தனியார் கிளினிக் நிலையத்தில் தவம் கிடக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் பனத்தாசை பிடித்து அங்கு சென்றுவிடுவதால் அரச வைத்தியசாலையான மட்டக்களப்பு வைத்தியசாலை விடுதிகளில் கவனிக்க வைத்தியரின்றி அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளி உயிரை அழிக்க துணை போகுன்றார்கள் என்பதே உண்மை. தனக்கு நேரும்வரை எந்த துயரமுமே நம்மை தாக்காது என்பதுதான் உண்மை.