நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இராணுவ சிப்பாய்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திருவிழா மகோற்சப பெருந்திருவிழா நேற்றையதினம் ஆரம்பமாகியது.

உலகம் முழுவதில் இருந்தும் கோடி பக்தர்கள் வந்து கலந்துகொள்ளும் நல்லூரான் ஆலயத்தில் தற்பொழுது இராணுவ பாதுகாப்பு கூடாரமாக மாறியுள்ளது.

இந் நிலமையானது இலங்கை அரசின் இராணுவத்தின் பலவீனத்தை காட்டி நிற்கின்றதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஆண்கள் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மேலனி இன்றி மிகவும் புனித்ததோடு வழிபடும் ஆயலத்தில், சப்பாத்துக்கால்களுடன் இவர்களின் கால் தடங்கள் சூழ உள்ளதை யார் கேட்பார்?

பாரம்பரியமாய் நாம் கடைப்பிடிக்கும் வழக்கம் எங்கே தெரியப்போகின்றது இந்த காடையர்களிற்கு,

இந்நிலையில் நல்லூரான் ஆலயத்திற்கே இவ்வாறு ஒரு பாதுகாப்பா அந்தளவு பாதுகாப்பற்ற ஒரு நாடா நம் நாடு? என பலரும் அங்கலாய்த்து வருகின்றனர்.

பாதுகாப்பில்லாத காஸ்மீர் ,சிரியா, ஏமன் போன்ற தாக்குதல் நடக்கும் பகுதிகளா? நம் தமிழர்தேச பகுதிகள்!

நல்லூரான் வரலாற்றிலேயே இல்லாதவாறு இம் முறை ஆலயத்திற்கு அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் இராணுவ கெடுபிடிகளும் அதிகளவு காணப்படுகின்றதாகவும் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் இது என்ன முருகா சோதனை மேல் சோதனை கவலை வெளியிட்டுள்ளனர்.