முஸ்லிம் வர்த்தகரின் ஜீப்பினை துரத்தி பிடித்த மோப்ப நாய்! சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மன்னார் மடு பிரிவு போலீஸ் அதிகாரி பந்துல வீரசிங்கத்தின் அறிவுறுத்தலின் பொலிசார் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அபோது வாகனங்களை பரிசோதித்துகொண்டிருக்கையில் திடீரென அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை போலிசாரும் பரிசோதிக்காமல் விட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரின் மோப்பநாய் அந்த வாகனத்தை துரத்தி சென்றதால், சந்தேகித்தில் வாகனத்தை மீண்டும் குஞ்சிகுளம் பகுதியில் மடக்கி பொலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது முஸ்லிம் வர்த்தகரின் ஜீப்பில் இருந்து 8 கிலோ 600 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மூன்று முஸ்லிம் நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.