யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடந்த கோர சம்பவம் – இளைஞன் பலி

கோப்பாய்- உரும்பிராய் வீதியில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மீது டிப்பா் வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவர் உயிாிழந்துள்ளாா்.

இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது.

இந்த விபத்தில் இயக்கச்சியைச் சேர்ந்த இளைஞ்ரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைகுலைந்த மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்ற்றுள்ளது.

இதையடுத்து பல்சர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.