குடும்பபிரச்சனை காரணமாக ஆணமடுவ பகுதியில் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஆணமடுவ பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரசிகா பிரியதர்ஷனி என்பவரே உயிரிந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.