யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்

யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த சில தினத்துக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்தில் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

யாழ் பல்கலையில் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்ற போதிலும் அவர்கள் முன்னிலையில் விஞ்ஞான பீடத்தின் 2 ஆம் வருட மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக் சிலர் காயமடைந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் மோதலுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 7 மாணவர்களை கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.