வல்லைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை- பட்டப்பகலில் நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் வல்லைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையின் 11 பவுன் தாலிக்கொடி பட்டப்பகலில் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பருத்தித்துறையை சேர்ந்த குறித்த ஆசிரியை பணி நிமித்தம் யாழ்ப்பாணம் சென்று பின்னர் மாலை 3 மணியளவில் வீடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

அப்போது வல்லை பகுதியில் வைத்து அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் அவரது தாலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

ஆசிரியை தடுமாறி கீழே வீழ்ந்தபோது அவ்வழியே வந்தவர்கள் மர்ம நபர்களை துரத்தி சென்ற போதும் கயவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் குறித்த ஆசிரியை முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் பொலிசார் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.