திருடனின் அழகில் மயங்கி திருமணம் செய்த பெண் பொலிஸ்!

உத்தரபிரதேச மாநிலத்தில் திருடன் ஒருவனின் அழகில் மயங்கி பெண் பொலிஸ் ஒருவர் அவரை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் தர்சனா என்பவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் அனில் துஜானா என்ற ரவுடி கும்பலுடன் சேர்ந்து குற்றங்களை செய்து வருகிறார். இதற்காக இவர் பல முறை சிறைக்கு சென்றுள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஆயுதம் கடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அந்த சிறையில் பயல் என்ற பெண் ஒருவர் பொலிஸாக பணியாற்றி வருகிறார். இவர் முதன் முதலாக ராகுலை நீதிமன்றில் வழக்கு விசாரணையில் சந்தித்துள்ளார். ராகுலை பார்த்தவுடனேயே அவர் மீது பயலுக்கு காதல் வந்துவிட்டது. சிறையில் இருந்து ராகுல் வெளியே வந்தவுடன் தன் காதலை வெளிப்படுத்தினார் பயல்.

ராகுலும் அதற்கு சம்மதிக்க இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்களாக இருந்த இருவரும் தற்போது திருமணம் செய்துள்ளனர். குற்றவாளியாக வந்தவரை பொலிஸ் ஒருவர் காதலித்து திருமணம் செய்த சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.