நம்பி வந்த மனைவியை.. கொடூரமாக கொலைசெய்து தலையுடன் தெருவில் நடந்த கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

ஆந்திர மாநிலத்தில் பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகேயுள்ள சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி கிராந்தி. இவருக்கும் பிரதீப் என்ற நபருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் மணி கிராந்தி வீட்டிற்கு பேச வேண்டும் என வந்த பிரதீப் அவரை தனியாக அழைத்துள்ளார்.

மணி கிராந்தியும், கணவர் தானே என்று நம்பி உடன் சென்றுள்ளார். அப்போது, றைத்து வைத்திருந்த அரிவாளால் பிரதீப் மணி கிராந்தியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணி கிராந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் வெட்டிய தலையுடன் பிரதீப் தெருவில் நடந்து சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மணி கிராந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.