சஜித்திற்கு ஆரம்பமே தடுமாற்றம்! வெற்றி பெறுவாரா? சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆரம்பமே அபசகுணமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பதுளையில் நேற்று பாரிய மக்கள் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

மெருமளவு மக்கள் கூட்டத்தில் சிக்கித் தவித்த சஜித்துக்கு மகத்தான வரவேற்று வழங்கப்பட்டது. இதன்போது மேடையில் வைத்து மாலைகள் அணிக்கப்பட்டன. இதன்போது மாலை அணிவித்த நபர் எதிர்பாராத விதமாக மேடையில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

சஜித் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கான ஆயுத்த நடவடிக்கையாக நேற்றைய கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மலை அணிவித்தவர் கீழே விழுந்தமை அபசகுணமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சிங்கள அரசியல்வாதிகள் ஜோதிடம் மீதும் சகுணம் மீதும் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.