அபிராமிக்கும் முகெனுக்கு சண்டையை மூட்டிவிட்ட வனிதா.. கடுப்பான சாண்டி வனிதாவை கேட்ட கேள்வி..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா நுழைந்ததிலிருந்தே மற்ற போட்டியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டி அட்வைஸ் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இன்று அபிராமியின் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைத்த வனிதா அட்வைஸ் கொடுக்கிறேன் என்று கூறி அவரை ஏத்திவிட்டு முகெனுக்கும், அபிராமிக்கும் இடையில் சண்டை வரவைத்து விட்டார்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில், முகென் அழுதுகொண்டே போட்டியாளர்களிடம் பேசுகிறார். அதற்கு தர்ஷன் அவ உன் பலவீனத்தை பயன்படுத்துறாடா என்று கூறுகிறார். அதன் பின் வனிதாவை பார்த்து சாண்டி நேற்று என்ன சொன்ன என்று கேட்கிறார். அதற்கு வனிதா ஒரு நிமிடம் இரு என சொல்ல, என்ன ஒரு நிமிஷம் இரு என்று கோபப்பட்டு ஏத்தி ஏத்திவிடு என்று சொல்லிவிட்டு சொல்கிறார். இதனால் பிக்பாஸ் வீடு இன்று பரபரப்பாகி உள்ளது.