கவினை சரமாரியாக பேசிய மதுமிதா…. பொங்கி எழுந்த லொஸ்லியா! சகுனியால் களைகட்டும் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்ததும் சண்டையும் அவருடனே வந்துவிடுகின்றது என்றே கூறலாம். ஆம் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழைந்ததும் பிக்பாஸ் வீடே சண்டையால் ரணகளமாகியுள்ளது.

நேற்றைய தினத்தில் அபி, முகேன் இடையே சகுனியாக செயல்பட்டு மிகப்பெரிய கலவரத்தினை ஏற்படுத்தினார். இதனை சாண்டி நேருக்கு நேராகவே அவரிடம் கோபப்பட்டு கேட்டார்.

இன்றைய தினத்தில் மதுமிதா வனிதா பேசியதை வைத்து சக ஆண்களிடம் சண்டைபோடுகின்றார். இதற்கு ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களின் ரியாக்ஷன் மிகவும் கவலையாக காட்சியளிக்கின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரொமோ காட்சியிலும் இந்த சண்டை தொடர்கின்றது. இதில் லொஸ்லியா மதுவிடம் தனது கோபத்தினைக் காட்டியுள்ளார்.