கதறி அழும் கவின்… கோபத்தில் வாயைத் திறந்த சாண்டி! சிறையில் கஸ்தூரி? புதிய ப்ரொமோவால் பயங்கர ஷாக்

டிஆர்பிக்காக மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி ஆனா வனிதாவால் ஒட்டுமொத்த வீடே ரணகளமாகியுள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவிலிருந்து தற்போது வெளியான ப்ரொமோ வரை அனைத்தும் சண்டையில் தான் சென்று கொண்டிருக்கின்றது.

இப்படியே பிரச்சினை பூகம்பமாக வெடித்து அமைதியாக இருந்த வீட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் கதறி அழும் கவினை தர்ஷன், லொஸ்லியா, சாண்டி, முகேன் என நான்கு பேரும் ஆறுதல் கூறுகின்றனர். மேலும் சாண்டி என்னுடைய தலைவர் பதவியையே நான் மதுவுக்காக விட்டு கொடுத்த போது அவர் எப்படி ஆண்கள் அடிமைப்படுத்துவதாக கூறலாம் என்று ஒரு புறம் கவலைப்படுகிறார். மற்றொரு புறம் புதிய போட்டியாளராக உள்ளே சென்ற கஸ்தூரி சிறையில் இருக்கின்றார்.