படைகளுடன் நல்லூர் ஆலயத்தில் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வட மாகாணத்திற்கு சென்றுள்ள பிரதமர் நேற்றைய தினம் வவுனியாவிற்கு சென்றிருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதுடன், நல்லூர் முருகன் ஆலயத்திற்கும் சென்றுள்ளார்.

அத்துடன், நல்லூர் ஆதீன கர்த்தாவுடன் சந்திப்பினையும் மேற்கொண்டுள்ளார்.