பிக்பாஸ் வீட்டிற்குள் வைகைப்புயல் வடிவேல்?… தீயாய் பரவும் புகைப்படம்!

பிக்பாஸ் வீடடில் நேற்றைய தினத்தில் மதுமிதா ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களும் சுயநலம் பிடித்தவர்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டை வைத்து ஒட்டுமொத்த ஆண் போட்டியாளர்களை அதிர வைத்தார்.

இதில் மனமுடைந்து சாண்டி தனது குமுறலை வெளிப்படுத்தினார். கவின் ஒருபடி மேலே சென்று கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு சக போட்டியாளரான தர்ஷன், முகேன், லொஸ்லியா, சாண்டி என ஆறுதல் கூறினார்கள்.

ஆனால் இதில் சேரன் என்ன பிரச்சினை நடந்தால் நமக்கென்ன என்ற பாணியில் அவர் டைனிங் டேபிளில் வைத்து வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்வினை அத்தருணத்திலேயே நெட்டிசன்கள் கலாய்த்து காரி துப்பாத குறையாக திட்டித் தீர்த்தனர். தற்போது அதற்கு ஒரு படி மேலே சென்று நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர் அருகே சென்று கலாய்ப்பது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். நெட்டிசன்களின் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.