ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தாபய ராஜபக்சவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம்.
ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார கூறுகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு கூடி ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.
அத்துடன் கட்சியின் உறுப்பினர்கள், ஆளுநர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் பொது இணக்கப்பாடு எட்டும் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.