விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை உயர்த்தி பேசும் மகிந்த! கோத்தா யார் என்று தெரியுமா..?

தமிழினப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தற்போது, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நேர்மையானவரென கூறுவதில் இருந்து அவர் எப்படிப்பட்டவரென்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தமிழினத்தை அழித்த தரப்பினர், தற்போது பிரபாகரனை உயர்த்திப் பேசுவதன் பின்புலத்தை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச யாரென்பது அனைவருக்கும் தெரியும். அவர் இனவழிப்பை செய்த போர்க்குற்றவாளி. அவருடைய வழிகாட்டலிலேயே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு அரங்கேறியது.

கோத்தபாய ராஜபக்ச சர்வதேச நீதிமன்றில் போர்க்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

இனவழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தற்போது, பிரபாகரன் நேர்மையானவரென கூறுவதிலிருந்து அவர் எப்படிப்பட்டவரென்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.