பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதாவால் ஏகப்பட்ட சண்டைகள் நிலவி வருகின்றது.
சிறையில் இருந்த கஸ்தூரி விடுதலையாகி வந்ததும் கவினிடம் அந்த நான்கு பெண்களிடம் பழகியதைக் குறித்து பேசுகின்றார். ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த கவின்… இதற்கு மேல யாராவது பேசுனீங்க சாவடிச்சிடுவேன் என்று கூறியுள்ளார்.
ஜெயிலுக்குள் இருக்கும் வரையில் வாயில்லா பூச்சியாகவும், நல்ல பிள்ளையாகவும் இருந்த கஸ்தூரி தற்போது தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீடு சண்டையாகவே செல்கின்றது. இதற்காக தீர்வு என்ன என்பதை நாளைய தினமே தெரியவரும்.
#Day54 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WuZXfKzhmf
— Vijay Television (@vijaytelevision) August 16, 2019