மகளை கிண்டல் செய்த இளைஞர்.. தட்டிகேட்ட அப்பாவிற்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞர்கள் செய்த வெறிச்செயல்..!

மகள் மற்றும் மனைவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக் கேட்ட கூழித்தொழிலாளியை ஓட ஓட விரட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆர். ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார்.

இவரது மனைவி ஹேமலதா, இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மணிகண்டன் கடையில் சாப்பாடு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது மணிகண்டனை வழிமறித்து 3 பேர் தகராறு செய்து தாங்கள் வைத்திருந்த கத்தி, அரிவாளால் சரமாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதனால், பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து மதிச்சியம் பொலிசார் வழ்க்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டதில், அவரை செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த உமாமகேசுவரன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வைகை ஆறு பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிகண்டனின் மனைவியும், மகளும் வைகை ஆற்றுக்குள் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்றிருந்த உமாமகேசுவரன், அவர்களை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது. எனவே மனைவி-மகளை கேலி செய்த உமாமகேசுவரனை மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர், உமா மகேசுவரனை சரமாரியாக தாக்கினார். அன்றைய தினத்தில் இருந்து இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் தான் ஆத்திரத்தில் மணிகண்டனை கொலை செய்ததாக’ இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.