பிக்பாஸ் வீட்டிற்குள் ஈழத்து போட்டியாளர்கள் மீது கடுப்பாக இருக்கும் மூவர்! அவர்கள் யார்?

தர்ஷன் மேல் சேரன் – வனிதா – மதுமிதா ஆகியோர் கடுப்பாகவே இருக்கிறார்கள். தர்ஷனின் மூவிங்கை இவர்களால் கணிக்க முடியாமல் இருக்கிறது.

இளையோர் அவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த மன நிலையில் இளையோர் இல்லை.

கவின் மற்றும் சாண்டி பழசுகளை புரிந்து கொள்வது இலகுவானது. சாண்டி பல்ஸ் பிடித்து ஆடுகிறார். கவின் அநியாயமாக பிஸ்கோத்தை நம்பி பெயரை கெடுத்துக் கொண்டார். மிக திறமையான இளைஞர். ஆனாலும் கவின் இல்லாது போனால் கலகலப்பு குறைந்துவிடும்.

முகின் எல்லாவற்றிலும் உணர்ச்சி வசப்படுபவர். நண்பர்கள் மட்டும் ஆறுதலாக இல்லாவிட்டால் எப்போதோ வெளியேறியிருப்பார். திறமையோடு கணிப்பும் தேவை. முகினுக்கு நண்பர்கள் நல்ல பலம்.

தர்ஷன் – லொஸ்லியா – முகின் ஆகியோர் வாழ்ந்த கலாச்சாரம் வேறு.

அதை உணரும் தன்மை சேரன் – வனிதா – மதுமிதா போன்றோருக்கு இல்லை.

கஸ்தூரி கேமை பார்த்து விட்டு வந்ததால் சேப் கேம் ஆட முயல்கிறார். இருந்தாலும் அவரால் ஈடு கொடுக்க முடியாது காக்கையாகிவிட்டார்.