அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 13 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 13 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகளால் இவர்கள் பொறுப்பேற்கப்பட்டிருந்தனர்.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற சிலாபத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 13 பேரிடமும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.