நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு , 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்துள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த இருவரும் கணவன், மனைவியென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.