9 வயது சிறுமிக்கு ஒரு பிள்ளையின் தந்தையால் நேர்ந்த கொடூரம்.! திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஆணைச்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஒன்பது வயதுடைய சிறுமிக்கு நூறு ரூபாய் பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரின் அயல் வீட்டில் சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும் சந்தேக நபரின் மகளுடன் தினமும் விளையாடச் செல்வதாகவும் சம்பவ தினம் சந்தேக நபரின் மகள் வீட்டில் இல்லாத நிலையில் நூறு ரூபா பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும்,

சிறுமி வீட்டுக்குச் சென்று தனது தாயிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த நபரை கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.