விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த? காரணம் இதுதானாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சி.வி விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்துவதாகவும் அது தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்தி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு சி.வி விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் என இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.