மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன்! இறுதியில் உயிரிழந்த பரிதாபம்

கோவை மாவட்டத்தில் மாமியார் மருமகன் இடையே ஏற்பட்ட சண்டை கடைசியில் மருமகனின் உயிரைப் பறித்தது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கோவை மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். பெயிண்டராக வேலை செய்த இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கவுண்டம்பாளையம் சக்திநகரைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நிறைமாத கர்ப்பிணியான தனது மகளை பிரசவத்திற்கு வீட்டிற்கு அழைத்து வந்த பெண் வீட்டினர், அவரை அரசு மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர். ரத்தம் போதிய அளவு இல்லாததால் சிகிச்சை செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராஜேந்திரனும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

பின்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஷாலினி தனது சகோதரி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தனது வீட்டிற்கு வருவதற்கு மனைவியை அழைத்துள்ளார் அதற்கு சம்மதிக்காத மனைவியும் அவரது அம்மாவும் வேலைக்கு செல்லாதவருடன் தன் மகளை அனுப்பமுடியாது என்று கூறியுள்ளார்.

இவர்களின் வாக்குவாதம் கடைசியில் கைகலப்பாக மாறி மாமியாரின் கன்னத்தில் அடித்துள்ளார் ராஜேந்திரன். இந்நிகழ்வு மாமனார் தங்கமணிக்கு தெரியவர ராஜேந்திரனை விசாரித்துக் கொண்டிருந்தார்.

அத்தருணத்தில் எதிர்பாராத விதமாக வாக்குவாதம் முற்றி சண்டையான நிலையில், கோபத்தில் கத்தியை எடுத்து ராஜேந்திரனின் வயிற்றிலும், முதுகிலும் குத்தியுள்ளார். பின்பு ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்த பொலிசார் தங்கமணியைத் தேடி வருகின்றனர்.