நேற்று சஜித் அணியின் கூட்டம்! உடைந்தது ஐக்கிய தேசியக் கட்சி

அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் அவரை ஆதரிக்கும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கிடையில் நேற்று இரவு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் கலந்துரையாடல் நடந்தது.

சஜித் பிரேமதாசவுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷா டி சில்வா ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்டிம கமகே, பெரும்பான்மையான எம்.பிக்கள், குறிப்பாக பின்வரிசை உறுப்பினர்கள் மிகவும் தெளிவாக உள்ளனர்.

சஜித் பிரேமதாசவே எமது ஜனாதிபதி வேட்பாளர். ​​கட்சியின் தலைமை மற்றும் அடுத்த பிரதம மந்திரியாக ரணில் விக்கிரமசிங்க இருப்பார் என தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.தே.க மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 96 பேர் சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளனர். அவர்களிற்கிடையிலான கூட்டமும் நேற்று நடந்தது.