சஜித்தை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு? திடீர் முடிவு

ஐக்கியதேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவிற்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என ஆங்கில செய்தி இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சஜித்பிரேமதாசா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நாங்கள் ஜேவிபிக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையேற்படலாம் என அவர் தெரிவித்தார் என குறிப்பிட்ட இணையம் தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் பிரதித்தலைவர் தமிழ்மக்கள் வடக்கில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்ட இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அரசமைப்பு தொடர்பில் அவரது நிலைப்பாடு என்னவென்பது எங்களிற்கு தெரியாது எனவும் குறிப்பிட்;டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரப்பகிர்வு குறித்த சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடும் எங்களிற்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.