மட்டக்களப்பில் ஆறு வயது சிறுமிக்கு நடந்துள்ள கொடூரம்! கையும் களவுமாக பிடிபட்ட நபர்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கிரான்குளம் கடற்கரைப்பகுதிக்கு கொண்டுசென்று குறித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த வேளையில் அப்பகுதியில் நின்றவர்களினால் சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தனது பேரப்பிள்ளையுடன் உறவுமுறையான சிறுமியையும் சந்தேக நபர் கடற்கரைக்கு அழைத்துச்சென்று இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யமுற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலதிக தகவல்கள் – குமார்