வெறும் பத்தே நாட்களில் ஸ்லிம்மாகனுமா? விலை கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை.. இந்த ஐந்து பழங்களையும் சாப்பிடுங்க?

புற்றுநோய் முதல் நீரிழிவு வரை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஐந்த பழங்கள்! விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டாலும் பரவாயில்லை!

வீடுகளின் கொல்லைகளில் அக்காலத்தில் எல்லாம், இலந்தை, கொய்யா, சீதாப்பழம் போன்ற மரங்கள் இருக்கும், தற்காலங்களில், கொல்லைகளே அரிதான நிலைகளில், இந்த மரங்களும் அரிதாகிவிட்டன.

பழங்களை விலை கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலை வந்து விட்டது. ஆனால், அதிக விலைக் கொடுத்தாலும் பரவாயில்லை இந்த ஐந்து பழங்களையும் வாங்கி சாப்பிடுங்கள்.

மாதுளம்பழம் – சோர்வை நீக்கும்
இரு வாரங்களுக்கு தினமும் மாதுளை பழச்சாறு அருந்தி பாருங்கள். பிறகு சொல்வீர்கள். இருவாரங்களுக்கு முன்னும் பின்னும் இருந்த மாற்றங்களை நன்றாக உணரக் கூடும்.

இவை உடலை சுறுசுறுப்பாக்கிவிடும். மூளையை தூண்டி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தை காணாமல் போகச் செய்யும்.

அன்னாசி – தொப்பையை குறைக்க
10 நாட்கள் தொடர்ந்து அதிகாலையில் அன்னாசி சாப்பிட்டால் தொப்பை குறைந்து ஸ்லிம்மாகிவிடும்.

பப்பாளி – எலும்பு பலமாக
பப்பாளிக் காயில் வரும் பால் வாய்ப்புண்ணிற்கு மருந்தாக போடலாம். பப்பாளி காயினை கூட்டாக செய்து சமைத்தால், குண்டான உடல் மெலியும்.

பப்பாளி பழத்தினை குழந்தைகளுக்கு கொடுத்தால், எலும்பு, மற்றும் பல் வளர்ச்சி பலம்பெறும். அதேபோல் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறையும். குடலிலுள்ள பூச்சிகளை அழிக்கும்.

சீதாப் பழம் – இதயம் சீராக இயங்க
சீதாப் பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் சீராக இருக்கும். இதய சம்பந்தமான நோய்கள் தாக்காது என அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

ஆரம்ப நிலையில் உள்ள காச நோய்க்கு சீதாபழம் அருமையான பலனைத் தருகிறது. காச நோயை குணப்படுத்தும் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின் அடிக்கடி சீதாபழங்கள் உண்டு வந்தால் , உள்ளுறுப்புகளில் இருக்கும் காயங்கள் விரைவில் குணமாகிவிடும்.

உலர் திராட்சை – ரத்தசோகை குணமாகும்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

சப்போட்டா – என்றும் இளமை
சப்போட்டா சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. மேலும் சுருக்கங்கள் வர விடாமல் தடுக்கிறது. மேலும் தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தியாகி, அனிமீயாவை போக்குகிறது.

அது போல் என்னதான் நிறைய சாப்பிட்டாலும், ஒட்டிய கன்னங்களுடன் ஒல்லியாக இருப்பவர்கள் தொடர்ந்து சப்போட்டாவை சாப்பிட்டால் பூசிய மெனியுடனும், ஆப்பிள் போன்ற கன்னமும் பெறுவது உறுதி.