நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் -மூன்று குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

இந்தியாவின், பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுளார்.

பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று பகல், மூன்று வயது குழந்தையொன்று மழையில் நனைந்தபடி அழுதுகொண்டிருந்துள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், குழந்தையின் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் அவருடைய இரண்டு ஆண் குழந்தைகளின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் உயிர்தப்பிய குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், குழந்தைகள் உடுத்தியிருந்த ஆடைகள் கந்தலாக காணப்பட்டதால், வறுமை அல்லது வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பால் குழந்தைகளுடன் சேர்ந்து, தாயும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் , இறந்தவர்களை பற்றிய அடையாளம் இதுவரை கண்டறிப்படவில்லை என்றும் அதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.