மைத்திரிவுடன் இணைந்துள்ள முக்கியஸ்தர்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான சந்திப்பு இன்று பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கலந்து கொண்டமை விசேட அம்சமாக விளங்கியது.

அடுத்த தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாருடன் அரசியல் செய்வதற்காக ஒரே மேடையில் அமரவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருப்பதாக அறியமுடிகின்றது.