யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை! வடபகுதி மக்களை மகிழ்ச்சியில் தகவல்

யாழ். பலாலி விமான ஓடுதளத்திலிருந்து இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு விமான சேவைகள் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பலாலி விமானத்தள அபிவிருத்திப் பணிகள் துரிமாக நடைபெற்று வருகின்றன. அபிவிருத்திப் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் பலாலி விமான நிலையம் பிராந்திய நிலையமாக தரமுயர்த்தப்பட்டு இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்” என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.